மண்வாசம்

Jeya Nadesan

ஆகவிதை நேரம்-04.07.2024
கவி இலக்கம்-1886
மண்வாசம்
—————–
அழகிய எம் தாய் நாடே
பனந்தோப்பும் தென்னம் தோட்டங்களும்
வளவு நிறைந்த பப்பா மா பலா வாழை மரங்களும்
வேலி நிறைய கிளுவை முருங்கை செம்பரத்தியும்
முற்றத்து வேம்பும் மல்லிகை பந்தலும்
ஊரில் இருந்தபோது சற்றும் நினைத்தும்
உயர்வாக அதன் அருமை தெரியவில்லை
உறவுகள் தந்த சுகம் தெரியவில்லை
பழமைகள் கற்று தந்த பண்பாடு
அப்பா வைத்த தென்னை மா மரங்களும்
ஆச்சி நாட்டிய மல்லிகை பந்தலும்
அதன் வளர்ச்சியில் மனதுள்ளே முகிழ்ந்தது
வீட்டு கூரையிலிருந்து தாழ்வார மழைச்சாரலும்
அணில் வெளவால் கொந்திய மாம்பழமும்
பழுத்து விழும் தென்னோலையும்
தாகம் தீர்க்க இளநீரும் நுங்கும்
நெருஞ்சி முள்ளாய் குத்தியதே
கூடி வாழ்ந்த நினைவுகளும்
அறுவகை சுவையுடன் விருந்தோம்பலும்
பச்சை பசேலென நெல் வயல் காணியும்
இன்று மண்வாசனை அறிந்து அனுபவிக்க
உரிமைக்குரிய அப்பாவுமில்லை தாயாருமில்லை

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

Continue reading