” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 274
30/07/2024 செவ்வாய்
விடுமுறை
—————
“வருஷம் தவறாது மூன்றுமுறை..
வந்திடும் அடிக்கடி விடுமுறை..
வாத்தி உமக்கு என்ன குறை..”
வைச்சான் வெடி ஓர் தறுதலை!

“ஊட்டிக்குச் சென்று ஓர்முறை,
உஷ்ணம் தணிக்க விடுமுறை..
வாத்திக்கு வேண்டும் ஒருமுறை,
வசையேன் போடுறாய் தறுதலை!”

“நீண்ட விடுமுறை உமக்குண்டு,
நிம்மதிக்கு என்ன குறையுண்டு?
காண்டு வருகுது உமைக்கண்டு!
கந்தப்பர் உம்வீடு பணக்குன்று!

“உழைத்த வலிபோக விடுமுறை,
உலகில் வேண்டுமடா தறுதலை!
பிழைத்துப் போய்விடு இம்முறை,
பிதற்றாதே மீண்டும் ஓர்முறை!”

“அரசாங்கம் விடுமுறை தருகுது!
அடுத்தவன் வயிறேன் எரியுது!
பிரசங்கம் செய்தாலும் திட்டுது!
பித்துப் பிடித்தேன் அலையுது!”
நன்றி
“மதிமகன்”
(தறுதலை- பொறுப்பில்லாது
ஊர்சுற்றும் ஒருவன்)
(காண்டு- சினம்)

Nada Mohan
Author: Nada Mohan