Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

படைப்பாளிகளின் படைப்பாளியிவர்

கவிஞர்களை ஊக்குவிக்கும் உன்னத உழைப்பு
கவிகளை சந்தத்துடன் ஆக்கிவிட அழைப்பு
மடைதிறந்த வெள்ளமென பாவலரும் முண்டியடித்து
படைத்திடுவார் பாக்களை சந்தங்கள் வடித்து

வேறுபட்ட தலைப்புக்களில் ஒவ்வொரு வாரமும்
மாறுபட்ட போதிலும் குறையாது காரமும்
கருத்துக்களோ பஞ்சமின்றி வரிகளுக்குள் தாராளம்
அருமையான ஆக்கங்களுள் தத்துவங்கள் ஏராளம்

பாவை தூக்கிவைத்து கொண்டாடுவார் பா.வை.ஜெ
தேவை என்றென்றும் பாவேந்தர் சேவையே
அள்ளியள்ளி வழங்கிடுவார் அளவில்லாத பாராட்டு
சொல்லப்போனால் மனமதுவும் கூத்தாடும் அதைக்கேட்டு

வற்றிய கிணற்றிலும் நீராக ஊறியது
அற்புதம் நிகழ்ந்து நிலமை மாறியது
புதுப்புது படைப்பாளிகள் எழுதியே பாமுகப்பூக்களில்
புதுமைகளாய் படைக்கின்றார்கள் தங்களது பாக்களில்

பிணிகள் நெருங்காத வாழ்க்கையை வாழ்ந்து
பணியினை நெடுங்காலம் தொடர்ந்திட வாழ்த்து
கலைக்கான அர்ப்பணிப்போ அன்றுதொட்டு இன்று
கலைமகள் ஆசீர்வாதம் உமக்கென்றும் உண்டு

ஜெயம்
04-08-2024

Nada Mohan
Author: Nada Mohan