பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

தேர்தல்

விரல்களின் மதிப்புதனை உணர்த்துகின்ற நாளிது
அரசியலின் மாற்றத்திற்காக வந்துகொண்ட நாளிது
காதிலே வாக்குறுதி பூச்சுற்றும் அரசியல்வாதி
காசுக்கு விலைபோகப்போகுது ஓட்டுக்களில் சரிபாதி

ஜந்தாண்டுக்கொருமுறை வரும் சனநாயக திருவிழா
மந்திரிகள் மட்டிலிது பணநாயக தெருவிழா
இலவசங்களில் ஏமாந்து வாக்களிக்கும் ஏமாளிகள்
குழப்பிவிட்டு கூத்து பார்திடுவார் கோமாளிகள்

தலைவிரித்தாடும் ஊழலைப்பற்றி முழங்கிடுவார் எதிர்க்கட்சி
நிலைநாட்டுவோம் நல்லாட்சியையென ஆளுங்கட்சி
ஓட்டு வேட்டைக்காக பற்பல நாடகங்கள்
பாட்டுப் பாடவென அவர்அவர்கென ஊடகங்கள்

முடிந்துவிட்டால் தேர்தல் சொன்னதெல்லாம் போச்சு
படியேறி வாக்குத் தேடியவரும் மறைந்தாச்சு
பாழ்பட்ட ஓட்டியந்திரம் கள்ளவோட்டை கூட்டிவிடும்
ஆள்வதற்கு அருகதையற்றவரையே அரியணையில் ஏற்றிவிடும்

ஜெயம்
13-09-2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading