தியாக தீபம் திலீபன்

சக்தி சிறினிசங்கர்

ஊரெழு மண்ணில் உதித்தவன் உலகத்தில்
பேரெழுதிச் சென்றவன் பெருந்தியாகம் செய்தே
பாரும் வியந்திடப் பார்த்தீபன் பசித்திருந்தான்
சோராது சென்றவன் சோர்ந்து போகிட
ஊரும் உலகமும் உணர்விலே உறைந்திட ஈராறு நாட்கள்
இருந்தான் இன்றும்
தீராத சோகமாய்த் தீலீபனின் மரணம்!
தன் சுகம் மறந்து தன் இன சுமை சுமந்தான்
வாழ்வினைத் துச்சமென எண்ணி
அச்சமின்றித் தாயகமண் மீட்க
ஐந்தம்சக் கோரிக்கை முன் வைத்தான்
உயிர் உருக உருக மெழுகுவர்த்தியானான்
ஊரெழு அன்னையின் தவப்புதல்வன்
அவன் கனவுகள் நனவாகும்வரை
பசித்திருக்கிறான் இன்றும்!

நன்றி வணக்கம்!

ஈராறு நாடாகள்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading