பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 282
15/10/2024 செவ்வாய்
“பெருச்சாளி”
மகிடாசுர பெருச்சாளி
மடிந்த காலமிது!
மகாசக்தி அருள்மழை
பொழியும் நேரமிது!

உல்லாச பெருச்சாளிகள்
ஊர்விட்டு ஓடுது!
உலகின் மூலைகளில்
உறைவிடம் தேடுது!

சல்லாப வாழ்வின்று
சரிவு காணுது!
தில்லானா பாடியே
தெறித்து போகுது!

அல்லல் தானாகவே
அடங்கிப் போகுது!
தொல்லை மெதுவாக
தொலையப் போகுது!

நல்லாகும் வாழ்வென
நாடும் நினைக்குது!
கல்லார் கற்றோர்
கைசேரப் பார்க்குது!

எல்லாம் எளிதாய்
இனிதாய் நடக்குது!
நல்லாய் நடந்தால்….
நமக்கும் விடியுமா!

நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading