உதிர்கின்ற இலைகளே

Selvi Nithianandan உதிர்கின்ற இலைகளே 684

உதிர்கின்ற இலைகளே

இறை படைப்பில்
இதுவும் ஒன்று
இலைகள் பூக்கள்
இருப்பதும் நன்று
இலைகள் உதிர்ந்து
சருகாய் கண்டு
இயற்கை உரமாய்
ஆவதும் உண்டு

ஆடை உடுத்திய
அழகை ரசித்து
கோடை வந்தால்
எழிலாய் நின்று
ஜாடை காட்டி
எம்மையும் அணைத்து
வாடைக் காற்றாய்
லசந்தம் தந்தாய்

மாரி வந்தால்
மனமும் உருக்கி
பனி மழையாய்
பவனி வருவாய்
உதிரும் காலம்
உறவாய் எம்முள்
உயிர் பெற்றிட்டே
மீண்டும் வருவாயே

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading