29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
ஒளியிலே தெரிவது
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-42
14-11-2024
ஒளியிலே தெரிவது…
ஒளியின்றி உலகமையாது
ஓய்வின்றி உடல் இயங்காது
வளமின்றி நிலம் அமையாது
வளியின்றி உயிர் வாழாது
கனவின்றி எம் இனம் பிறக்கவில்லை
கனவு பலிக்க பட்ட பாடு மறக்கவில்லை
உறவுகளை இழந்த கதை யாரறிவார்
ஊன்று கோலும் அற்றநிலை யார் புரிவார்?
வண்ண விளக்கு வீட்டில் எரிந்தாலும்
வரும் திரியின் வேதனை யாரறிவார்
எண்ணமெல்லாம் நிழலாய் தொடருது
என் மகனில் தெரியுது உன் சிரிப்பும் கூட
கண்ட கனவு பலிக்கட்டும் அண்ணனே..
காவியமே காந்தள் மாவீரச் செல்வங்களே
ஒளியிலே தெரிவது தங்கள் முகமே
ஒரு போதும் அணையாமல் ஒளிரனுமே
நம்பிக்கை ஒளியில் நடப்போம்
நாளை நமக்கொரு தேசம் கிடைக்கும்
கனவெல்லாம் நனவாகிப் போகும்
காலம் வெகு தூரமில்லை செல்வங்களே..
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...