சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_169

“மாற்றம்”
மாற்றம் ஒன்று மாறாதது
ஏற்றம் ஒன்று ஏறாதது
தோற்றம் கண்டு
தோன்றியவர் இலட்சிய
சிந்தனை வாதி!

எங்கள் தலைவன்
ஆண் தாய்
ஆற்றல் மிக்க
மாமனிதன்
மாற்றம் காண!

இனத்தின் விடுதலைக்காக போராடினார்
காக்கை வன்னியன் கூட்டம்
காட்டி கொடுத்து
மாற்றத்துக்கான தேடல்
கரைந்து போனதே!

நம் தமிழ்
தேசியத்தை
காத்திட
தமிழ்தேசிய
கூட்டமைப்பை உருவாக்கி
சம்மந்தர் ஐயாவை தலைவராக்கி தமிழனுக்கொரு பிரதிநிதியை அமைத்து வைத்தார்!

தீர்க்கதரசி
தேசிய தலைவர்!

தீயினில் எரியாத
தீபங்கள்
தேசத்துக்கு
விதையான
நம் முத்துக்கள்
எம் மாவீர செல்வங்கள்
கனவை தீயில் கருக்கும்
தீய சக்திகள்
அரசியல் வாதிகளால்
மாற்றம் தோன்றுமா !
மாற்றம் காணுமா!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
17.11.24

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading