க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 287

உயிர்க் கொடை

இனிய நண்பா!

நான் கற்பம்
தரிக்க மட்டுமா பிறந்தேன் ?
தாய் மண்ணுக்காகவும்
வாழ்வேன் பாடல்!

எதிர் ஒலிக்கின்றது !

கூந்தலை இழந்து
குறிக்கோளை மனதில்
கொண்ட பெண்
தன் நண்பியிடம்
நான் தாய் மண்ணுக்காக
உயிர்க் கொடையானால்
என் உடலை
உடனே எரித்து விடு

இல்லை என்றால்
என் சடலத்திலேயும்
வன் புணர்ச்சி
செய்வார்கள் காடையர்கள்
என்றாள் வீராங்கனை !…

இன்னும் அந்த
மிருகங்கள்
வாழலாம் !
உன் வழியும்
விழியும்
விழிப்பாக இருக்கட்டும்
நண்பா !

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading