பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

உயிர்க்கொடை

வீட்டிற்க்கு வந்த
பிரதீபனாய்
விரும்பியே ஏத்த
விமலனாய்
வீரமாய் அவனது
செயலாய்
விதியும் பிரித்ததே
முடிவாய்

வானூர்தி போட்டதே
குண்டாய்
வானமும் வடித்த
மழையாய்
வாரியே கிடைத்த
பிணமாய்
வந்ததே செய்தியும்
இறப்பாய்

உயிரும் வேங்கையின்
காவியமாய்
உறவுகள் போற்றிடும்
மாதமாய்
உன்னத உயிர்கொடை
நாளுமாய்
உதிரத்து உறவுகளை
வணங்கிடுவோம்

செல்வி. நித்தியானந்தன்
(எனது அண்ணாவின்
மகன் கிளாலியில் இறப்பு)

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading