மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-53
26-11-2024

உயிர்கொடை

தானதர்மம் செய்வதில்
தருமனும் கர்ணனும்
வரலாறில் படித்த
வள்ளல்களே!

தக்க சமயத்தில்
தன் இனம், மொழி காக்க
தன்மானம் கொண்டு
தம் உயிர்நீத்த தலைவனே!

உயிர்கொடை உத்தமரே
உறவுகளை பிரிந்து நின்று
உணவுகளும் பல நாளின்றி
உலக நாடும் கேட்பாரின்றி

செங்களமாடிய
செல்வங்கள் நீவிர்.
செய்த கொடைக்கு ஈடேது
சென்று வருவீர்கள் தாங்கள்!

எம் இனங்களின் மனங்களில்
உங்களின் தியாகம்
செங்காந்தளின் தீ சுவாலையாய்
சுடர் விட்டெரியட்டும்

தங்களின் கனவுகளும்
தாகங்களும் உறங்காது
கைகொடுத்து, காந்தள் மலர்கொண்டு
கைதொழுது மண்டியிடுவோம்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading