மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
உயர்க்கொடை
————-
விலைமதிப்பில்லாத இந்த உயிர்
விடியலுக்காக ஈந்த உயிர்
ஈகைச்சுடராக எரிகிறதே
ஈன்றவர் நெஞ்சம் கொதிக்கிறதே
நாட்டு நலனுக்காக நல்லுயிர் கொடுத்து
காடுமேடு பள்ளம் தாண்டி
காவலர்களாய் காத்தாரே எம்மக்களை
வேட்டு வைத்து உயிரை
ராணுவம் பறித்ததே
எத்தனை உயிர்கள் எத்தனை இடர்கள்
பட்டினி இருந்து பரிதவித்த போதும்
ஏட்டினில் எழுதிய எண்ணற்ற நினைவுகள்
பாட்டினில் பாடி இன்று என்ன பயன்
உயிர்கொடை கொடுத்த
வள்ளல் எங்கே
உயிர்காக்க தம்முயிர் ஈந்த மாவீர்ர்
எங்கே
முத்தான உயிரை சொத்தாக எம்
தாய்மண்ணுக்காய் ஈந்த
கொடைவள்ளல்களே
காந்தள் பூக்களால்
அர்ச்சனை செய்து
அஞ்சலி செய்கிறோம்
உமது ஈகைக்காய்
மாவீர மணிகளே!
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading