வசந்தா ஜெகதீசன்

ஈரம்…
மனதிற்குள் மண்டியிட்டு மனிதத்தை காத்துருகும் மகத்தான சக்தியிது
ஈரத்தின் கசிவே இதயத்தின் ஈர்ப்பாய்
இன்னமும் மனிதம் வாழ்கின்ற உலகாய்
பசுமையின் எழிலாய்
மெல்லப் பேசிடும்
மேதினியின் சாளரம்
உணர்வின் உந்துதலில்
உறைந்துள்ள ஆசனம்
இருப்பிடத் தேவைக்காய் இளகித் தாழ்திறக்கும்
வலிமையில் உறையாத வாசத்தின் மெல்லிதழே ஈரமே ஈர்ப்புவிதி.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading