05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-289,தலைப்பு!
ஈரம்
…………
மகளினை வாழ்த்தும் வீரம்
மனத்தினில் அன்பின் ஈரம்!
பகலினில் ஒளியின் வீச்சாய்
பைந்தமிழ் அறிவின் வீச்சாய்!
முகமதில் விழியின் பார்வை
முத்தமிழ்க் கவிதைக் கோர்வை!
தகவலாய் விளங்கும் தாயே!
தமிழ்மகள் வெல்வாய் நீயே!
தாயகம் மீட்பாய் நீயே
தமிழையே காப்பாய் நீயே!
வாயகம் போற்றப் பாடும்
வையக ஔவை நீயே!
நாயகம் பூத்த தாலே
நற்பயன் வருமா தாயே ?
நேயகம் கொண்ட காதல்
நேர்த்தியின் மகளே வாழி!
அளப்பெரும் பாசம் வைத்தாய்
அகவைநாள் நினைவில் தைய்த்தாய்
களப்பணி புரியும் நீயே
கனவினில் வாழ்த்த வைத்தாய்
உளப்பெரும் தொட்டில் கட்டி
உன்னையே ஆட்டு கின்றேன்!
வளமெலாம் பெற்றே பேரன்
வாழ்வுடன் உயர்வாய் நீயே!
. ஆசிரியை அபிராமி
கவிதாசன்.
10.12.2024
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...