தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

போனும் போராட்டமும்

Sivatharsany

வியாழன் கவி -2087!

போனும் போராட்டமும்..

விந்தை நிறை விஞ்ஞானம்
சிந்தை குளிர்ந்தா தந்தது
அஞ்ஞானம் தோற்றுவிடும்
மெய்ஞ்ஞானம் குறுகிவிடும்..

உள்ளங்கை உரசித்தினம்
உலகத்தை சுற்றி வரும்
உயிர்களை வசப்படுத்தி
உணர்வினை மழுங்கடிக்கும்..

நேரத்தை விழுங்கி நல்லா
நேசத்தை விலகச்செய்யும்
பாசத்தை வெறுத்து மெல்ல
பற்றினைத் தன் பாலீர்க்கும்..

படுக்கை அறையில் இராச்சியம்
பார்வைக்கு கேடு பரகசியம்
கல்வியும் இதனால் அன்றோ
கற்றிடும் தோல்வியும் பாடம் தரும்..

குழந்தை முதல் கிழவி வரை
கும்மியடிக்கும் போனிலன்றோ
குறூப் கோல் போட்டுவிட்டால்
பெரும் பசியும் ஓடி விடுமே..

ஒன்றன் பின் ஒன்றாய்
வகையது விளம்பரம் சொல்லும்
புதிய புதிய அறிமுகங்கள்
காசினைக் களவாகிக்கொள்ளும்..

பயனது பல்கிப் பெருகி அதனுள்
பணமது விரயம் புரியுமன்றோ
காதல் முதல் கல்யாணம் குழந்தை
கலந்து சிறப்பது தொலைபேசியில்
தானே…
சிவதர்சனி இராகவன்
8/1/2024

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading