” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

போனும் போராட்டமும்

Sivatharsany

வியாழன் கவி -2087!

போனும் போராட்டமும்..

விந்தை நிறை விஞ்ஞானம்
சிந்தை குளிர்ந்தா தந்தது
அஞ்ஞானம் தோற்றுவிடும்
மெய்ஞ்ஞானம் குறுகிவிடும்..

உள்ளங்கை உரசித்தினம்
உலகத்தை சுற்றி வரும்
உயிர்களை வசப்படுத்தி
உணர்வினை மழுங்கடிக்கும்..

நேரத்தை விழுங்கி நல்லா
நேசத்தை விலகச்செய்யும்
பாசத்தை வெறுத்து மெல்ல
பற்றினைத் தன் பாலீர்க்கும்..

படுக்கை அறையில் இராச்சியம்
பார்வைக்கு கேடு பரகசியம்
கல்வியும் இதனால் அன்றோ
கற்றிடும் தோல்வியும் பாடம் தரும்..

குழந்தை முதல் கிழவி வரை
கும்மியடிக்கும் போனிலன்றோ
குறூப் கோல் போட்டுவிட்டால்
பெரும் பசியும் ஓடி விடுமே..

ஒன்றன் பின் ஒன்றாய்
வகையது விளம்பரம் சொல்லும்
புதிய புதிய அறிமுகங்கள்
காசினைக் களவாகிக்கொள்ளும்..

பயனது பல்கிப் பெருகி அதனுள்
பணமது விரயம் புரியுமன்றோ
காதல் முதல் கல்யாணம் குழந்தை
கலந்து சிறப்பது தொலைபேசியில்
தானே…
சிவதர்சனி இராகவன்
8/1/2024

Nada Mohan
Author: Nada Mohan