மொழியும் கவியும்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-46
23-01-2025

மொழியும் கவியும்

மொழியும் கவியும் இணைந்தே
மொழிக்கவி உனை புனைந்தே
விழியும் செவியும் விழித்தெழ
விமர்சனம் தரும் காவியமாய்

காலங்களை உணர்த்தி கவிசொல்லி
கருப்பொருளுடன் உணர்வு ஊட்டி
அமுதசுரபியாய் கரம் எடுத்து
அள்ளிப்பருகிடவும் குறையாதிது

கம்பன் சீராட்டி மூவேந்தர் பாராட்டி
கடந்தாலும் மொழிக்கடலில் ஈராயிரமாண்டு
இளமை குன்றாமல் இணையமெல்லாம்
இணையும் மொழியும் கவியும் நீ.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading