சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உலகே மாயமாய்…
உருளும் உலகின் அசைவிலே
உபாதை நிறைக்கும் வாழ்விலே
முகமூடி வாழ்வே முகத்திரை
முழுமை செலுத்தும் ஒத்திகை

விடியல் மட்டும் எமதாகும்
விடயமேதும் நிகழாது
கருவி எம்மை ஆள்கிறது
கடக்கும் பொழுது விரையமாய்
நிறை குன்றும் செயல்களாய்
ஏற்றம் எதிலும் நிகழாது
இன்றைய வாழ்வின் இயல்பென்ன
ஊரவர் நிலவரம் அறிவதில்லை
பாசம் நேசம் பகிர்வதில்லை
பலராய் ஒன்றித்த மகிழ்வில்லை
வேசம் போடும் வாழ்வு போல்
விரையும் புவியே என்னநிலை
நேற்றைய நினைவு கனிகிறது
இன்றைய வாழ்வு கசக்கிறது
நாளைய வாழ்வின் நிலை என்ன
அறிவுக்கண்ணை திறப்பது யார்
அடுத்தபடி நிலை உரைப்பது யார்
விழித்தெழு தோழமை உறவாடி
விடியலின் முகவுரை நாமாகி
வீழ்தலற்று எழுகை பெற
ஒற்றுமைக் குடையை உயர்வாக்கு!
பெற்றுயர் பேற்றிக்கு வழிகாட்டு
உலகே ஓன்றென உரக்கவிழி!

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan