” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வரமானதோ வயோதிபம்

ராணி சம்பந்தர்

ஈரமானதே இளமை அனுபவம்
உரமானது இனிமைப் பதிவகம்
பாரமான சோதனை வேதனை
மறந்தே சாதனை படைத்ததில்
துறக்கவே முடியாத ஞாபகமே

எந்நேரமும் மகிழ்வுப் பொழுதே
உற்சாக ஊக்கமும் உழுதிடவே
பயமின்றிப் பெலம் கரமிணைய
நல் விளைச்சல் பலன் தந்ததே

விதிவசத்தால் பாரமான முதுமை
உரு மாறியதில் பெருமூச்சானது
கடித்துச் சுவைக்கப் பல் மறுக்க
கண்ணிருந்தும் பார்வை மங்கிட
தசை எலும்புகள் நலிவடைந்திட

தீராத வலி பெருகிய கண்ணீரில்
திருகிய வாலிபப் பருவம் மெருகிட
மானிடர் வரமானதோ வயோதிபம்

Nada Mohan
Author: Nada Mohan