மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

வரமானதோ வயோதிபம்

ராணி சம்பந்தர்

ஈரமானதே இளமை அனுபவம்
உரமானது இனிமைப் பதிவகம்
பாரமான சோதனை வேதனை
மறந்தே சாதனை படைத்ததில்
துறக்கவே முடியாத ஞாபகமே

எந்நேரமும் மகிழ்வுப் பொழுதே
உற்சாக ஊக்கமும் உழுதிடவே
பயமின்றிப் பெலம் கரமிணைய
நல் விளைச்சல் பலன் தந்ததே

விதிவசத்தால் பாரமான முதுமை
உரு மாறியதில் பெருமூச்சானது
கடித்துச் சுவைக்கப் பல் மறுக்க
கண்ணிருந்தும் பார்வை மங்கிட
தசை எலும்புகள் நலிவடைந்திட

தீராத வலி பெருகிய கண்ணீரில்
திருகிய வாலிபப் பருவம் மெருகிட
மானிடர் வரமானதோ வயோதிபம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading