வர்ண வர்ணப் பூக்களே

வர்ண வர்ணப் பூக்களே

பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில் காட்சியும் தோன்றும்
மண்ணும் மகிழவே மாநிலத்தின் இயற்கையும்
பூக்கள் விரியவும் வண்டுகள் அமரவும்
கீதங்களாக இசையும் பிறந்திடும் போதிலே
ஆடும் நினைவுகள் ஆயிரம் கோடியடி
கண்ணுக்கு விருந்தும் கமலங்களின் எழுச்சியும்
பேசும் சித்திரங்களாய் காற்றோடு பேசுதே
கமிழும் மணத்தின் வாசனையும் மயங்கிடவே
ஆகா அருமை அகிலத்தின் பெருமை
ஓகோ வர்ண வர்ணப்பூக்களே வாழ்க

சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading