உலகே மாயமாய்…

உருளும் உலகின் அசைவிலே
உபாதை நிறைக்கும் வாழ்விலே
எதிலும் ஈடுபாடற்று இயந்திரமாகும் வாழ்க்கையே
விடியல் மட்டும் எமதாகும்
விடயமேதும் நிகழாது
கருவி எம்மை ஆள்கிறது
கடக்கும் பொழுது விரையமாய்
நிறை குன்றும் செயல்களாய்
ஏற்றம் எதிலும் நிகழாது
இன்றைய வாழ்வின் இயல்பென்ன
உறவுகள் கூடி மகிழ்வதில்லை
பாசம் நேசம் பகிர்வில்லை
பலராய் ஒன்றித்த மகிழ்வில்லை
வேசம் போடும் வாழ்வு போல்
நேற்றைய நினைவு
கனிகிறது இன்றைய வாழ்வு கசக்கிறது நாளைய வாழ்வு என்னநிலை
நாம் காட்டும் வழிநிலை சரியா தவறா
உருளும்உலகேநீதிசொல்!நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading