நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

உலகே மாயமாய்…

உருளும் உலகின் அசைவிலே
உபாதை நிறைக்கும் வாழ்விலே
எதிலும் ஈடுபாடற்று இயந்திரமாகும் வாழ்க்கையே
விடியல் மட்டும் எமதாகும்
விடயமேதும் நிகழாது
கருவி எம்மை ஆள்கிறது
கடக்கும் பொழுது விரையமாய்
நிறை குன்றும் செயல்களாய்
ஏற்றம் எதிலும் நிகழாது
இன்றைய வாழ்வின் இயல்பென்ன
உறவுகள் கூடி மகிழ்வதில்லை
பாசம் நேசம் பகிர்வில்லை
பலராய் ஒன்றித்த மகிழ்வில்லை
வேசம் போடும் வாழ்வு போல்
நேற்றைய நினைவு
கனிகிறது இன்றைய வாழ்வு கசக்கிறது நாளைய வாழ்வு என்னநிலை
நாம் காட்டும் வழிநிலை சரியா தவறா
உருளும்உலகேநீதிசொல்!நன்றி

Nada Mohan
Author: Nada Mohan