உலகே மாயமாய்…

உருளும் உலகின் அசைவிலே
உபாதை நிறைக்கும் வாழ்விலே
எதிலும் ஈடுபாடற்று இயந்திரமாகும் வாழ்க்கையே
விடியல் மட்டும் எமதாகும்
விடயமேதும் நிகழாது
கருவி எம்மை ஆள்கிறது
கடக்கும் பொழுது விரையமாய்
நிறை குன்றும் செயல்களாய்
ஏற்றம் எதிலும் நிகழாது
இன்றைய வாழ்வின் இயல்பென்ன
உறவுகள் கூடி மகிழ்வதில்லை
பாசம் நேசம் பகிர்வில்லை
பலராய் ஒன்றித்த மகிழ்வில்லை
வேசம் போடும் வாழ்வு போல்
நேற்றைய நினைவு
கனிகிறது இன்றைய வாழ்வு கசக்கிறது நாளைய வாழ்வு என்னநிலை
நாம் காட்டும் வழிநிலை சரியா தவறா
உருளும்உலகேநீதிசொல்!நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading