அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

நன்றியாய் என்றுமே 69

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
04-09-2025

இருள் அகற்றும்
ஒளி விளக்கே
அறிவொளி தரும்
அழகிய சூரியனே

எழுத்தாய் புனைந்து
எழுதித் தள்ளி
சொல்லாய் வார்த்து
சொரிந்து பேசி

எல்லாப் பக்கமும்
எடுத்து இயம்பி
எமை வளர்த்த
ஏணியும் தானே

இதய ஆழத்தில்
நன்றி வேரூன்றி
கண்ணின் ஓரத்தில்
கண்ணீர்த் துளியோடு

பிரிவின் விளிம்பில்
பிரிந்தாலும் நாம்
கல்வி போதித்து
கண்களைத் திறந்தவரை

ஒவ்வொரு நாளும்
அன்பு உணர்வோடு
நன்றியாய் என்றுமே
நம் சமுதாயம் வளர்ப்போம்.

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading