பண்படுமோ பண்பாடு 759 23.04.2026

செல்வி நித்தியானந்தன் பண்படுமோ பண்பாடு மண்ணிலே பண்பாட்டால் பலருக்கு வேதனை பகுத்தறிவு தொலைத்து பணமழிக்கும் போதனை பள்ளியில்...

Continue reading

வாணியின் வளவு 84

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-09-2025

மூவுலகைக் காக்கும் தேவியரே
மூவரின் அருளும் தேவையே எமக்கு கையில் சூலமேந்தி, கண்ணில் கருணையைச் சுமந்தவளே துர்க்கை

உழைக்கும் கரத்தில் ஊக்கமாய் லட்சுமியும்
வளரும் பயிராகி
வளம் பெருக்குவாய் நீயே

வாணியின் வளவில் நுழைந்த மனம்
வாழ்வின் தத்துவம் பேசுகிறது
அமைதி வாசம் வீசுகிறது
ஞான ஒளி தெரிகிறது

கல்வி கலைகளை யோசிக்கிறது
மாலை நேரம் கூடுகிறது
கலந்து மனமும் சிந்திக்கிறது
கதை,கவிதை கோலமிடுகிறது

வாணியின் வளவு அமைதியாய்
வனாந்தரமற்று செழிக்கிறது.
கலைக்கு அரசியாய் நீவிர்
கவி புனைய வைத்தாயே தாயே

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading