பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

இணையமே நீ இல்லையெனில்

சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது வீச்சுடன் கவிகள்
காதுகள் கேட்குதே காணீர்!
விரிந்ததே உலகமும் பரந்து
வீறுடன் பயணமும் தொடர
அரியதோர் இணையமும் தானே
அறிவியல் சாதனம் ஆச்சே
கரிசனை கொள்ளவே வேண்டும்
கண்டதும் கற்றிட வேண்டாம்
மரித்தலும் ஆகுமே மாந்தர்
மயங்கவும் செய்யுமே இணையம்!
நன்றி வணக்கம்!

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading