இணையமே நீ இல்லையெனில்

சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது வீச்சுடன் கவிகள்
காதுகள் கேட்குதே காணீர்!
விரிந்ததே உலகமும் பரந்து
வீறுடன் பயணமும் தொடர
அரியதோர் இணையமும் தானே
அறிவியல் சாதனம் ஆச்சே
கரிசனை கொள்ளவே வேண்டும்
கண்டதும் கற்றிட வேண்டாம்
மரித்தலும் ஆகுமே மாந்தர்
மயங்கவும் செய்யுமே இணையம்!
நன்றி வணக்கம்!

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading