திசை மாறும்பறவைகள்

திசை மாறும்பறவைகள்

நல்லிசை கண்டே நலமுடன் வாழ்வும்

துள்ளிசை ஆகவே துயரின்றி நின்றே

கள்ளமின்றியே வாழ்ந்தவர் கோடியே கேளாய்

பணத்தைக் கண்டதும் பண்பை இழந்தே

திசைமாறும் கூட்டம் திருந்தவே வாய்ப்பின்றி

அலைமோதும் நிலையில் ஆடும்

ஆட்டங்கள்

வலை போட்டு பிடிக்கவும் முடியாமல்

காலத்தின் கோலமோ கனியாத மனங்களும்

நிலையான எண்ணங்கள் நிலைகுலைந்து போகையிலே

மாயைகளுக்குள் நுளைந்தே மயங்கும் மனிதர்கள்

காயங்கள் கொண்டவர் கலங்கியே நின்றிடவே

சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading