சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நினைவுகள் கனக்கிறதே

ரஜனி அன்ரன் ( B.A) “நினைவுகள் கனக்கிறதே” 27.11.2025

தலைகுனிந்த எம்மினத்தை
தலைநிமிரச் செய்து தன்மானத்தோடு நாம்வாழ
தம்முயிரை ஈகம்செய்த தேசமறவர்களின்
தியாகநினைவுகள் நெஞ்சோடு கனக்கிறதே
நினைவுகளும் மலர்கிறதே !

தமிழ்வாழ இனம்வாழ
தம்முயிரைக் கொடையாக்கி
உடலை வெடியாக்கி உணர்வைப் பொறியாக்கி
வித்தாகிப் போனவரின்ஒலி
மண்ணின்மார்பில் வலியாகத் துடிக்கிறதே
விண்கூட மழைப்பூவைச் சொரிகிறதே
கண்களில்நீரும் பனிக்கிறதே !

காற்றிலும் சேற்றிலும் கடுங்குளிரிலும்
ஊற்றாகிப் போனவரின் உயிர்த்தியாகம்
இனத்தின்அரணாக இன்னும் உயிர்ப்போடுதான்
மண்ணில் விழுந்த உம்வேர்கள் மரபாக உயர்கிறது
நாளைஎழும் தலைமுறைக்கும் அறமாக உரைக்குமே
எல்லைகள் கடந்தும் எம்உணர்வோடு கலந்துவிட்ட
உன்னதர்களின் நினைவுகள் கனக்கிறதே மனசெல்லாம் !