” நகைப்பானதோ மனிதநேயம் “

ரஜனி அன்ரன்“ நகைப்பானதோ மனிதநேயம் “ 11.12.2025

ஏற்றத்தாழ்வுகள் அகல வேற்றுமைகளும் ஒழிய
நல்லிணக்கம் சிறக்க நியாயங்கள் பிறக்க
அமைதியை நிலைநாட்ட அமுலானதே மனிதநேயம்
இன்றோ இனம் மதம் மொழியென்று
இறுகிக் கிடக்கிறது மனங்கள்
மண்டியிடுகிறது மனிதநேயம் !

அன்பு என்பது அலங்காரப் பொருளாக
அறமென்பது வெறும் அறிக்கையாக
அனர்த்தங்களின் போது வேடிக்கை பார்ப்பது
ஒருவரின் வேதனையில் மற்றவர் சிரிப்பது
தியாகத்தின் பெருமையினைக் கொச்சைப் படுத்துவதென
சமூகவலைத் தளங்களில் பேசுபொருளாகவும்
இடர்பாடுகளிலும் நகைப்பாகுதே மனிதநேயம் !

ஆனாலும் இயற்கையின் சீற்றத்திலும் இடிபாடுகளிலும்
சிக்கித்தவித்தோரை சீக்கிரமாய் மீட்டெடுத்து
தம்முயிரையே பணயம் வைத்து உறவுகளை மீட்ட
உன்னதநேயம் மிக்கவர்களை நினைக்கையில்
இன்னமும் மனிதநேயம் உயிர்ப்போடு இருப்பதை
உணரமுடிகிறது எம்மால் !

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading