” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

” நகைப்பானதோ மனிதநேயம் “

ரஜனி அன்ரன்“ நகைப்பானதோ மனிதநேயம் “ 11.12.2025

ஏற்றத்தாழ்வுகள் அகல வேற்றுமைகளும் ஒழிய
நல்லிணக்கம் சிறக்க நியாயங்கள் பிறக்க
அமைதியை நிலைநாட்ட அமுலானதே மனிதநேயம்
இன்றோ இனம் மதம் மொழியென்று
இறுகிக் கிடக்கிறது மனங்கள்
மண்டியிடுகிறது மனிதநேயம் !

அன்பு என்பது அலங்காரப் பொருளாக
அறமென்பது வெறும் அறிக்கையாக
அனர்த்தங்களின் போது வேடிக்கை பார்ப்பது
ஒருவரின் வேதனையில் மற்றவர் சிரிப்பது
தியாகத்தின் பெருமையினைக் கொச்சைப் படுத்துவதென
சமூகவலைத் தளங்களில் பேசுபொருளாகவும்
இடர்பாடுகளிலும் நகைப்பாகுதே மனிதநேயம் !

ஆனாலும் இயற்கையின் சீற்றத்திலும் இடிபாடுகளிலும்
சிக்கித்தவித்தோரை சீக்கிரமாய் மீட்டெடுத்து
தம்முயிரையே பணயம் வைத்து உறவுகளை மீட்ட
உன்னதநேயம் மிக்கவர்களை நினைக்கையில்
இன்னமும் மனிதநேயம் உயிர்ப்போடு இருப்பதை
உணரமுடிகிறது எம்மால் !

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading