பொங்குவாய்…

வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்…
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும் நிலத்திலும் புன்னகை மகிழ்ச்சி புதுயுகம் நோக்கிய எழுச்சி
சீர்நிறை வாழ்வின் வரமாய்
சிறப்புற பொங்குவாய் புத்தாண்டே
இயற்கை அனர்த்தம் இல்லாது ஓழிக
வறுமை வரட்சி வாட்டாது உயர்க
போரும் வதையும்
நீக்கியே நித்திலம் நிறைந்த பொங்கட்டும் மகிழ்ச்சி!
நன்றி

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading