உயிர்மெய்யாய்….

வசந்தா ஜெகதீசன் உயிர்மெய்யாய்... மொழிக்கு முதலானது முழுமைக்கு நிகரானது உயிர்ப்பில் உலகானது உயிராமெய்யே வேரானது வாழ்வின் தடமானது வரலாற்று மொழியானது தகமை பலமானது தாய்மொழியாய்...

Continue reading

என்னவென புரியவில்லை

செல்வி.நித்தியானந்தன்
என்னவென புரியவில்லை

ஏன்எனக்கு இப்படி
என்னவெனபுரியவில்லை
என்நேரம் சரியில்லையா
புரிந்து கொள்ளவே
முடியவில்லை
காலநிலை மாற்றம்
தொடர் மழையாகவும்
வெயிலாகவும் மாறவே
ஏழரைசனி பிடித்ததுவா
ஏழுநாள் படுக்கை
இரண்டு நாள் ஓய்வு
முடியவில்லை என்னால் புரியவில்லை
வெளியில் போவதுமில்லை
வீட்டுக்குள் கோழி
அடைபடுத்த கோழியாய்
இரண்டு வாரம்
மின்னல் வேகத்தில்
பறக்கனும்
இனி இறைவன்
எழுதிய விதி
மூச்சுக்கு மூச்சு
பிள்ளையின் நினைவு
முழுமதி போல்
அவன் முகம்
மூச்சுக்குள்ளே முழு
வண்ணமாய்.

செல்வி.நித்தியானந்தன்

Author: