01
Apr
வியாழன் கவி -2315 பொட்டு
பௌர்ணமி நிலவாம் வதனத்திலே
பார்த்துப் பார்த்து இடுவாய் பொட்டு
பெண்ணுக்கு பெருமை நெற்றியில்
சூடும் வண்ணப் பொட்டாம்.....
இரா.விஜயகௌரி
விடிகாலைச் சூரியனோ -இவள்
விரித்தெழுதும் பாசவலை – நிதம்
புன்னகையுள் கட்டி வைத்து
புதிர் எழுதும் காரிகையாள்
பரிவோடு நோக்கிடுவாள் – எனை
பரிதவித்து தேடிடுவாள்
அரவணைத்து முத்தமிட்டு
அன்பினிலே புதைத்திடுவாள்
அவள் உதிர்க்கும் குரலசைவில்
அமிழ்தெனவே மொழி சுவைக்கும்
அச்சார உறவெழுதி அடி மனதில்
உறுதி கொண்டு நிலையிடுவாள்
அவள் முகத்தல் பலர் சாயல்
மூத்தோரின் உறவு சொல்லும்
எதை எழுத எதை உரைக்க
உதிரத்தின் பின்னலிலே பின்னலிடும்
பேர்த்தியிவள்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.