தாமரை இலையாய்…

வசந்தா ஜெகதீசன் தாமரைஇலையாய்.... உறவாடும் உலகியலும் இதுவாகும் நடப்பு ஒட்டியும் ஒட்டாமாலும் உறவாடும் சிறப்பு எதிர்பார்ப்பின் முனைப்பிலே...

Continue reading

எனையாளும் சூரியனோ………

இரா.விஜயகௌரி

விடிகாலைச் சூரியனோ -இவள்
விரித்தெழுதும் பாசவலை – நிதம்
புன்னகையுள் கட்டி வைத்து
புதிர் எழுதும் காரிகையாள்

பரிவோடு நோக்கிடுவாள் – எனை
பரிதவித்து தேடிடுவாள்
அரவணைத்து முத்தமிட்டு
அன்பினிலே புதைத்திடுவாள்

அவள் உதிர்க்கும் குரலசைவில்
அமிழ்தெனவே மொழி சுவைக்கும்
அச்சார உறவெழுதி அடி மனதில்
உறுதி கொண்டு நிலையிடுவாள்

அவள் முகத்தல் பலர் சாயல்
மூத்தோரின் உறவு சொல்லும்
எதை எழுத எதை உரைக்க
உதிரத்தின் பின்னலிலே பின்னலிடும்
பேர்த்தியிவள்

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading