நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மாசற்ற உலகு நோயற்ற வாழ்வு

நகுலா சிவநாதன்
மாசற்ற உலகு நோயற்ற வாழ்வு

மாசு அற்ற உலகை மாண்புடன் பேணினால்
நோயற்ற வாழ்வு நொடிப்பொழுதும் கிடைக்கும்
வீசும் காற்றும் தூய்மையெனில்
வியனுறு உலகும் பயன்பெறுமே!

நீரின் தூய்மை நிலத்திலமைந்தால்
வேரின் உணவும் வெகுமதியாகும்
பாரில் வாழ்வு பயனுறும் வண்ணம்
பாதை யமைத்து வாழ்வோம் தினமும்

போரின் வடுவே பொழுதில் உலகை
மாசின் விழிம்பில் மையம் கொள்ளும்
கந்தகப் புகையும் காற்றில் கலக்க
நம்தம் பூமி நலிவுற மாசாகும்!

மண்ணின் வளமும் மனித முயற்சியும்
மாசற்ற உலகை அமைத்திட முயன்றால்
நோயற்ற வாழ்வும் நோக்கும் இலக்கும்
தீதற்கு தோன்றும் தீமைகள் விலகும்

நகுலா சிவநாதன் 1850

Author: