மாசற்ற உலகு நோயற்ற வாழ்வு

நகுலா சிவநாதன்
மாசற்ற உலகு நோயற்ற வாழ்வு

மாசு அற்ற உலகை மாண்புடன் பேணினால்
நோயற்ற வாழ்வு நொடிப்பொழுதும் கிடைக்கும்
வீசும் காற்றும் தூய்மையெனில்
வியனுறு உலகும் பயன்பெறுமே!

நீரின் தூய்மை நிலத்திலமைந்தால்
வேரின் உணவும் வெகுமதியாகும்
பாரில் வாழ்வு பயனுறும் வண்ணம்
பாதை யமைத்து வாழ்வோம் தினமும்

போரின் வடுவே பொழுதில் உலகை
மாசின் விழிம்பில் மையம் கொள்ளும்
கந்தகப் புகையும் காற்றில் கலக்க
நம்தம் பூமி நலிவுற மாசாகும்!

மண்ணின் வளமும் மனித முயற்சியும்
மாசற்ற உலகை அமைத்திட முயன்றால்
நோயற்ற வாழ்வும் நோக்கும் இலக்கும்
தீதற்கு தோன்றும் தீமைகள் விலகும்

நகுலா சிவநாதன் 1850

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading