மாசற்ற உலகு நோயற்ற வாழ்வு

நகுலா சிவநாதன்
மாசற்ற உலகு நோயற்ற வாழ்வு

மாசு அற்ற உலகை மாண்புடன் பேணினால்
நோயற்ற வாழ்வு நொடிப்பொழுதும் கிடைக்கும்
வீசும் காற்றும் தூய்மையெனில்
வியனுறு உலகும் பயன்பெறுமே!

நீரின் தூய்மை நிலத்திலமைந்தால்
வேரின் உணவும் வெகுமதியாகும்
பாரில் வாழ்வு பயனுறும் வண்ணம்
பாதை யமைத்து வாழ்வோம் தினமும்

போரின் வடுவே பொழுதில் உலகை
மாசின் விழிம்பில் மையம் கொள்ளும்
கந்தகப் புகையும் காற்றில் கலக்க
நம்தம் பூமி நலிவுற மாசாகும்!

மண்ணின் வளமும் மனித முயற்சியும்
மாசற்ற உலகை அமைத்திட முயன்றால்
நோயற்ற வாழ்வும் நோக்கும் இலக்கும்
தீதற்கு தோன்றும் தீமைகள் விலகும்

நகுலா சிவநாதன் 1850

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading