நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு

சக்தி சிறினிசங்கர்
சுற்றுப் இந்தப் பூமி
சுத்தம் கெட்டுப் போக
பற்றும் இல்லா மாந்தர்
படைகள் பொங்கி எழவே
முற்றும் போரில் முழுதாய்
மூச்சும் திணறிப் போகும்
அற்றுப் போக அசுத்தம்
அப்போ தானே சுகமே!
வானும் வளமும் குன்ற
வகையைத் தேடும் வன்மம்
மீனும் கடலில் நஞ்சாய்
மிதக்கும் உயிராய்க் கிடக்கும்
கானும் கழிவு நிறைந்து
காண்போம் அன்றோ நாளும்
நானும் நீயும் உணர்ந்தால்
நலமாய் வாழ நடப்போம்!

Author: