மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு

சக்தி சிறினிசங்கர்
சுற்றுப் இந்தப் பூமி
சுத்தம் கெட்டுப் போக
பற்றும் இல்லா மாந்தர்
படைகள் பொங்கி எழவே
முற்றும் போரில் முழுதாய்
மூச்சும் திணறிப் போகும்
அற்றுப் போக அசுத்தம்
அப்போ தானே சுகமே!
வானும் வளமும் குன்ற
வகையைத் தேடும் வன்மம்
மீனும் கடலில் நஞ்சாய்
மிதக்கும் உயிராய்க் கிடக்கும்
கானும் கழிவு நிறைந்து
காண்போம் அன்றோ நாளும்
நானும் நீயும் உணர்ந்தால்
நலமாய் வாழ நடப்போம்!

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading