உலகக் கோப்பைத் திருவிழா

கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை துரத்தியே மின்னலாய் ஓட்டம்
உலகக் கோப்பையை வென்றிட ஆட்டம்

எல்லைகள் இல்லாத உலகமாய் இங்கு
இதயங்கள் ஒன்றாய் இணைந்தது அங்கு
இடியென ஆடிடும் வீரரை பாரீர்
விண்ணையும் தொட்டிடும் வேகத்தை பாரீர்

நிறமெது ஜாதியெது மொழியெது நாடெது
உலகத்தை ஒண்றென இணைதிடும் திருவிழா
அகிலம் முழுவதும் நேசிக்கும் உதைபந்து
கோடி மாந்தர் விழிகளால் சுவைப்பதிது

வியர்வை துளிகளால் நனைகின்ற களம்
புதிய வரலாற்றை படைக்கப்போகும் நிலம்

ஜெயம்
09-07-2026

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading