நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நட்பென்றாலே!

நகுலா சிவநாதன் நட்பென்றாலே!1 நட்பே உறவின் முதல்நாடி நாடுவதும் அதுவே நிறைநாடி உப்பாய் நட்பு உயர்ந்திட்டால் உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும் நட்பின்...

Continue reading

“நட்பென்றாலே”

நேவிஸ் பிலிப் கவி இல(640)

அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும் இல்லை
வளர்பிறை போலாகி ஒளியாய்
முழு மதியாய் வளரும் நட்பு

ஆடை குலையும் நிலை காண
கரம் விரைந்து செயலாற்றுதல் போல
துன்பம் விளையும் வேளையிலே
விரைந்தோடி இன்னல் தீர்க்கும் நட்பு

பண்பு நலனும் அன்பு நயமுமாய்
புனித உணர்வாய் புதிய உறவாய்
மனதினால் அடை காத்து
மலர்ந்திருக்கும் இனிய நட்பு

மகிழ்ச்சித் தருணங்களில் கூடி
கொண்டாடிக் களிப்புற மட்டுமல்ல
நெறி தவறி தடுமாறும் வேளையிலே
உணர்த்தித் திருத்தி இறுதிவரை
உடனிருக்கும் தூய நட்பு.

Nada Mohan
Author: Nada Mohan