அலங்கார நல்லூரா!!

நகுலா சிவநாதன் அலங்கார நல்லூரா! நல்லூர் முருகனே செவ்வேள் அழகனே! வல்ல எழில் வடிவ மயிலோனே! சொல்ல வார்த்தையில்லாச் சுடரழகுச் சோதியிவன் சுந்தர எழிலழகன் எங்கள்...

Continue reading

அலங்கார நல்லூரா!!

நகுலா சிவநாதன்

அலங்கார நல்லூரா!

நல்லூர் முருகனே
செவ்வேள் அழகனே!
வல்ல எழில் வடிவ
மயிலோனே!
சொல்ல வார்த்தையில்லாச் சுடரழகுச்
சோதியிவன்
சுந்தர எழிலழகன்
எங்கள் முருகன்

இன்பம் தந்த இருபத்தைந்து திருவிழாக்கள்
இதயத்தை குளிர்வித்த
இன்னெழில் விழாக்கள்

அழகன் முருகனின்
அலங்கார உருவமும்
அற்புதத் தேரும்
அடியார்கள் மனங்களில்
அருள் பாலித்த கணங்களாகின

உள்ளன்பு கொண்டு
வெள்ளமென திரண்ட
வேரான மக்களைக்
காக்க எழுந்த கந்தா
போற்றி போற்றி

நகுலா சிவநாதன்1873

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading