Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.06.24
கவி இலக்கம்-268
“பெண்ணே”
—————
இறைவன் படைப்பில் முதல் படைப்பே பெண்
உலகிற்கு நீ ஒரு பெரும் வரம்
கவிஞர்களுக்கு கற்பனை உலகை கொடுப்பது நீதான்
பெண் இனத்தில் மகளிர் அழகு
பெளர்ணமியாய் உன் முகம்
உன் நெற்றியில் வட்டமாக போடும்
பொட்டு
மீன் போன்ற உன் கள்கள்
உடை இடை உன் நடை பாவனை
கார் கூந்தலாக உன் நீள முடி
உன் கன்னத்தில் விழும் குழி
உன் காலில் அணியும் மெட்டி கால்சங்கிலி
கழுத்து ஆரம் கையில் போடும் வளையல்
பொன் நகையாய் உன் புன்னகை
பெண் இனத்தில் மகளீர் அழகு
பெண்ணே இறைவன் படைப்பில் நீதானே
நீயில்லாமல் இவ்வுலகே இல்லை
உன் பெருமைகளை எடுத்து ஐயப்பாட முடியாது பெண்ணே
ஜெயா நடேசன்
ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading