Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு நேரம்-05.11.2024
கவி இலக்கம்-285
“அழியாத கோலங்கள்”
———————
கவிகள் கற்பனையாக
பக்கங்கள் மலர்ந்த
நூல்கள் வாசகர் படிக்க
பேனாவால் கிறுக்கலிலும்
பாத விரலிட்டு வரைந்த
கோலங்கள்
இனிக்கும் நினைவுகளாக
வெள்ளை வெளீரென
புலரும் சூரியனின் வர்ணக் கோலங்கள்
வையகம் சுமக்கும்
இயற்கையின் அவலங்கள்
பற்பல நிகழ்வுகளாக
அழிக்கும் உயிர் கோலங்கள்
என்றும் நினைவூட்டும்
தாயக மக்களின் அழியாக் கோலங்கள்
வாழ்வில் ஒவ்வொரு வருடமும் வந்து போகுமே
நெஞ்சத்தில் வரைந்த கோலங்களாக
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan