Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-03.12.2024. கவி இலக்கம்-288
“பனிப்ப பூ”
—————-
மேகம் இருட்டிக்க
குளிர் காற்று மெல்லென வீச
வெள்ளைப் பூவாக
பொல பொலவென கொட்ட
ஜேர்மனியர் காத்து கிடந்த
வெண் பனியானது கொட்டுமே
நிலத்திற்கு உரமாக நிறைய
மக்கள் மனங்கள் குளிர்ந்திடுமே
குழந்தைகள் மண் மனிதன் செய்து விளையாட
பனியிலே உருண்டு பிரண்டு ஓடியாடி மகிழ்வினமே
கிறிஸ்மஸ் மரங்களெல்லாம் பனியால் மூடவே
அழகு தரும் காட்சியாகுமே
வேலை போகும் ஊழியர்கள்
வாகன சுரண்டல் பெரும் வேலையே
நடக்கும் மனிதர் சறுக்கலிலே விழுவினரே
ஊரெல்லாம் மனிதர்கள் சூடு எரித்து குளிர் காய
விலங்குகள் ஒதுங்கி உறைவிடம் தேட
நாமெல்லாம் அப்பலோவில் செல்வதென
எண்ணமதில் நினைவில்
மூடிக் கட்டி திரிவோமே
ஜெயா நடேசன்
ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan