தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

Jeya Nadesan

கவிதை வாரம்–25.08.2022
கவி இலக்கம்-1563
தேடும் உறவகளின்
தணியாத ஏக்கங்கள்
———————————
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்ல வார்த்தையில்லை
தேடும் உறவுகளின்
தணியாத ஏக்கங்கள்
ஆண்டாண்டு தோறும் தேடியும்
கண்டு பிடிக்காத நிலையில்
தோளிற் தாங்கிய தந்தையாக
மடியிற் சுமந்த அம்மாவாக
கணப்பொழுதில் கணவனை இழந்த பெண்ணாக
எப்படி இந்த பிரிவுகளை தாங்க முடியும்
தேடித் திரிந்து உயிர்களை விட்ட தாய்மார்கள்
ஏங்க வைத்து தவித்த உறவுகளின் குரல்கள்
களைத்து போய் ஒதுங்கிய பெற்றோர்கள்
கடத்தப்பட்டோர் காணாமற் போனோரை
நீதி கேட்டு நியாயம் வேண்டி
உண்ணாவிரதம் போராட்டங்களும்
தம் உயிரை பாராது நீதி கேட்டு
படியேறி இறங்கி களைத்தார்களே
சிறை பட்ட வாழ்வு கறை பட்டு போனதே
ஏங்கிடும் எம்மவர் உறவுகளுக்கு
நல்லோர் கண்கள் அகல விரியட்டுமே
தேடும் உறவுகளின் ஏக்கங்கள் குறையட்டுமே

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading