மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

Jeya Nadesan

கவிதை வாரம்–25.08.2022
கவி இலக்கம்-1563
தேடும் உறவகளின்
தணியாத ஏக்கங்கள்
———————————
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்ல வார்த்தையில்லை
தேடும் உறவுகளின்
தணியாத ஏக்கங்கள்
ஆண்டாண்டு தோறும் தேடியும்
கண்டு பிடிக்காத நிலையில்
தோளிற் தாங்கிய தந்தையாக
மடியிற் சுமந்த அம்மாவாக
கணப்பொழுதில் கணவனை இழந்த பெண்ணாக
எப்படி இந்த பிரிவுகளை தாங்க முடியும்
தேடித் திரிந்து உயிர்களை விட்ட தாய்மார்கள்
ஏங்க வைத்து தவித்த உறவுகளின் குரல்கள்
களைத்து போய் ஒதுங்கிய பெற்றோர்கள்
கடத்தப்பட்டோர் காணாமற் போனோரை
நீதி கேட்டு நியாயம் வேண்டி
உண்ணாவிரதம் போராட்டங்களும்
தம் உயிரை பாராது நீதி கேட்டு
படியேறி இறங்கி களைத்தார்களே
சிறை பட்ட வாழ்வு கறை பட்டு போனதே
ஏங்கிடும் எம்மவர் உறவுகளுக்கு
நல்லோர் கண்கள் அகல விரியட்டுமே
தேடும் உறவுகளின் ஏக்கங்கள் குறையட்டுமே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading