Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-04.01.2024
கவிதை இலக்கம்-1795
புத்தாண்டை வரவேற்றபடி
—————————-
ஆங்கில புத்தாண்டே புலர்ந்திட வருக
உலகமெலாம் இன்னிசை ஒலித்திடவே வருக
உளம் மகிழ வரவவேற்று நிற்கிறோம் வருக
புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டமே
புத்தாடை அணிந்து பட்டாசு கொழுத்தி மகிழ்வோமே
அவனியில் மக்களை மகிழ வைக்க வருக
மனித நேயம் மாண்புடன் பகிர வருக
ஒன்று பட்டு உழைத்து உண்டு வாழ வருக
பசி பட்டினி பொருளாதாரம் தர வருக
உணவு உறைவிடம் தந்து காக்க வருக
வன் கொடுமை நீங்கி நாடு வளம் பெற வருக
நல்லதே நடக்க நானிலம் சிறக்க வருக
மக்களிடையே மாற்றங்கள மலர வருக
அகிலம் முழுவதும் சமாதானம் தர வருக
இனிமையான புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading