மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Kavikco Parama Visvalingam

மாற்றம் வேண்டும்….

அழலோடு விளையாடி அரசாளுமே – அதன்
நிழலோடு நிதம் பேசும் சமாதானமே

குழலோடு ரவை பாடும் கோரங்களே – அதை
குழுவோடு கொண்டாடும் பாவங்களே – மக்கள்
அழுகின்ற அவலங்கள் அரங்கேறுதே – அதை
அழகென்று இரசிக்கின்ற அரசாங்கமே.

வாழ்க்கையும் பகையாகி வளர்கின்றதே
வரலாறும் புகையாகி மறைகின்றதே
அதிகாரம் அரசாளும் நிலை மாறவே – புதிய
அகராதி படைக்கின்ற நிலை வேண்டுமே.

வாழ்கின்ற மக்களுக்கு வளி காட்டவே – உலகில்
வளமான அரசெங்கும் எழ வேண்டுமே
ஏராழ்ந்த நிலம் வாழும் பயிர்போலவே – மக்கள்
பாராளும் நிலையொன்று வரவேண்டுமே!

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading