புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

Kavikco Parama Visvalingam

மாற்றம் வேண்டும்….

அழலோடு விளையாடி அரசாளுமே – அதன்
நிழலோடு நிதம் பேசும் சமாதானமே

குழலோடு ரவை பாடும் கோரங்களே – அதை
குழுவோடு கொண்டாடும் பாவங்களே – மக்கள்
அழுகின்ற அவலங்கள் அரங்கேறுதே – அதை
அழகென்று இரசிக்கின்ற அரசாங்கமே.

வாழ்க்கையும் பகையாகி வளர்கின்றதே
வரலாறும் புகையாகி மறைகின்றதே
அதிகாரம் அரசாளும் நிலை மாறவே – புதிய
அகராதி படைக்கின்ற நிலை வேண்டுமே.

வாழ்கின்ற மக்களுக்கு வளி காட்டவே – உலகில்
வளமான அரசெங்கும் எழ வேண்டுமே
ஏராழ்ந்த நிலம் வாழும் பயிர்போலவே – மக்கள்
பாராளும் நிலையொன்று வரவேண்டுமே!

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading