தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

pon.tharma.

வணக்கம் .
இது வியாழன் கவி .
இலக்கம் -537
ஆகா வியப்பில் விழிகள் .(15.03.23.)
—————————————-
பற்றுடையார் (இவர் )தமிழில் ,பேசுடுவார் அழகு மொழியில் .
கற்றதுவும் தாய் மொழியில் ,கடைசிவரை ,மூச்சென்றார் தன்வழியில் .

பெற்ற தாயிலும் மேலென்றார்,நம் மொழியை .
மற்றவர்க்கும் உகந்தளிக்க ,மனமுகந்தார்,தனி வழியில் .

கனத்த வேளையிலும் ,கலக்கமின்றிச் ,சுமந்து செல்வார் .
மனத் தூய்மையுடன் ,மக்களிடம் சேர்த்திடுவார் .

பருத்த ஆலாயிருந்து ,பங்களிப்புச் செய்திடுவார் .
விருப்புடைய பட்சிகளை ,வரவேற்று வளர்த்திடுவார் .
ஆகா …….வியப்பில் ;;;;;;;;; விழிகள் ;;;;;;;
இறுதிவரை தொடரும் ,,,, பணிகள் .
ஆக்கம்
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading