Selvi Nithianandan சித்திரையும் வந்ததே (611)

சித்திரையும் வந்ததே

சித்திரையில் வந்ததொரு வருடமும்
சிங்காரமாய் இரண்டு நாளாம்
சிற்றுண்டி பொங்கல் மகிழ்வும்
முத்திரையாய் குரோதி வந்ததே

அறுபது ஆண்டினது கணிப்பு
அறிமுக பட்டியலின் பணிப்பு
ஆண்டும் பகைகேடாய் இருப்பு
ஆனந்தமாய் அவனியில் நிறைப்பு

விடுமுறை வந்ததால் மகிழ்வு
விடியலும் பொங்கலாய் உணவு
உறவுகளும் வாழ்த்தாய் சொல்ல
உளமும் மகிழ்வாய் சென்றதே.

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

Continue reading

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading