Selvi Nithianandan

விழிப்பு

கருவொன்று உருவாகி
தருவாகும் நிலையாகி
பழிகேளா சொல்லாகி
வழியாகி விழிப்போடு

அன்னை அணைப்பு
ஆனந்த கணிப்பு
ஆற்றல் பணிப்பு
ஆசுபடா விழிப்பு

விழிநீரில் கண்ணயர்ந்து
விடியலில் எனைமறந்து
விளக்கின் ஒளிசுடராய்
வழிமேல் விழிப்பு

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading