பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

கனவு மெய்ப்படவேண்டும்

பாசமாய் உறவுகள் நேசித்திட
பார்போற்ற என்றும் வாழ்ந்திட
பிளவுபடா வேராய் இருந்திட
பின்னிப் பினைந்து சேர்ந்திடனும்

உள்ளதைக் கொண்டு சிறந்திட
உவகையாய் என்றும் நிலைத்திட
உலகிலே வறுமை ஒழிந்திட
உருட்டும் பிரட்டும் அழிந்திடனும்

நாடுகளிடை போட்டி இல்லாது
நா நயத்துடன் என்றும் சிறந்து
நல்லறிவு நானும் உணர்ந்து
நற்பெயருடன் வாழல் வேண்டும்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading